போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Thursday, October 1, 2015

இனி காளான் மூலம் செல்போன்களைச் சார்ஜ் செய்யலாம்!'

ருபுறம் சூரிய ஆற்றலிலிருந்து மின்னுற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தாலும், முடிந்த அளவு மின்-கழிவுகளை வெளியிடாத மின்சார மூலங்களைத் தேடித் தேடி ஆய்வு செய்து வருகின்றனர் ஆய்வாளர்கள்.
அப்படிப்பட்ட ஓர் ஆய்வின் விளைவுதான் இந்தக் காளான் பேட்டரிகள். அமெரிக்காவிலுள்ள, கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு மாற்று மின்னுற்பத்தி என்ற தளத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில்
, ’போர்டபெல்லோ’ எனப்படும் குறிப்பிட்ட வகைக் காளான்களைக் கொண்டு மின்கலங்களை, அதாவது பேட்டரிகளை, மின்னூட்டம் செய்ய முடியும் என்று கண்டறிந்துள்ளது.

இது குறித்துப் பேட்டியளித்த, அவ்விஞ்ஞானக் குழுவின் தலைமை விஞ்ஞானியான, ப்ரென்னன் கேம்ப்பெல், “ இன்று நாம் பயன்படுத்தும் மின்கலங்கள் பெரும்பாலும் லித்தியம் அயனிகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இந்த லித்தியம் மின்கலங்களை மின்னூட்டம் செய்வதற்கு கரியின் உலோகக் கலவையான ‘க்ராஃபைட்’ அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த க்ராஃபட்டைத் தயாரிக்க அதிகச் செலவு ஏற்படுவதோடல்லாமல் இதன் கழிவுகள் சுற்றுப்புறத்தைப் பெரிதும் மாசுபடுத்துகின்றன. அது மட்டுமன்றி இந்த லித்திய-மின்கலங்களைச் சுத்திகரிக்க ‘ஹைட்ரோஃப்ளூரிக் ஆசிட்’ எனப்படும் அடர்திரவம் தேவையாகிறது. இந்த திரவம் புறச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் அமிலக் கழிவாகும். எனவேதான் இந்த மாற்று மின்கல முயற்சியை மேற்கொண்டோம்” என்கிறார்
தொடர்ந்து, இந்தக் காளான் பேட்டரியின் இயக்கம் குறித்துத் தெளிவுறுத்துகின்றனர் ஆய்வுக்குழுவினர். ’அகாரிக்கஸ் பைஸ்போரஸ்’ எனப்படும் இந்தக் குறிப்பிட்ட வகைக் காளானில் ’ஸ்போர்ஸ்’ எனப்படும் நுண்துளைகள் மிக அதிகம். இத்தகையத் துளைகளின் வழியாக, மின்-திரவங்கள் எளிதில் போக்குவரத்து மேற்கொள்ள முடியும் என்பதால் இதில் மின் கடத்தல் செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்தவகைக் காளானில் பொட்டாசியம்  தன்மை அதிகமாக இருப்பதால் இது மின்னுற்பத்திக்கு மிகவும் ஏற்றதொரு கலமாகும்.

நாள்போக்கில் இதன் மின்னூட்டத்தை ஊக்குவிப்பது சுலபம். அதற்கு எந்தவித வேதியியல் திரவங்களும் தேவையில்லை. மேலும் இயற்கையாகவே மக்கிவிடும் பொருளென்பதால் சுற்றுப்புறத்திற்கு எந்தவிதத் தீமையும் விளைவிக்காத மின் கலமாக இது தொடர்ந்து செயல்படும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

தற்போது முதற்கட்ட உற்பத்தியில் இருக்கும் இந்த மின் கலங்கள், விரைவில் சந்தைக்கான உற்பத்தியை எட்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மழைநாட்களில் முளைக்கும்போதெல்லாம், தேவையற்றது என்று பிடுங்கியெறிப்படும் காளான் நம் அலைபேசியின் மின்னூட்டத்திற்கு உதவுமென்றால், இனி அவற்றைத் தேடித் தேடி வளர்ப்போம்தானே!

-ச.அருண்

No comments:

Post a Comment